தன்னை தோற்கடித்த வி.சி.சந்திரகுமாருக்காக ஈரோடு மேற்குக்கு மாறிய முத்துச்சாமி!
சென்னை: முன்னாள் அமைச்சர் முத்துச்சாமி ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி முத்துச்சாமி. எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்ற முன்னாள் அமைச்சர். ஜெயலலிதாவிடம் ஏற்பட்ட கருத்து மோதல் மற்றும் ஒதுக்கப்பட்டதால் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தார்.

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டார். அத்தொகுதியில் அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட்டார். இதில் முத்துச்சாமி தோல்வியுற்றார், சந்திரகுமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் தேமுதிகவிலிருந்து பிரிந்து வந்து மக்கள் தேமுதிகவை ஆரம்பித்துள்ள சந்திரகுமார் திமுக அணியில் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து அவரது கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதில் ஈரோடு கிழக்கில் சந்திரகுமார் மீண்டும் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து முத்துச்சாமி பவானி அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது சீட் மறுக்கப்படுவாரா என்ற பேச்சு நிலவி வந்தது. ஆனால் இன்று அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் அவர் ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளராக இடம் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications