உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலை ஏற்படும்: பழ கருப்பையா வார்னிங்
உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலைதான் ஏற்படும் என பழ கருப்பையா எச்சரித்துள்ளார்.
Recommended Video

சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலைதான் ஏற்படும் என பழ கருப்பையா எச்சரித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை.

இதனால் தமிழக மக்களும் விவசாயிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல இடங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் மாலத்தீவு நிலை ஏற்படும் என மூத்த அரசியல்வாதியும் முன்னாள் எம்எல்ஏவுமான பழ.கருப்பையா பேட்டியளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அரசியலமைப்பு சிதையும் என்று பழ.கருப்பையா கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு பிரதமர் மோடி தான் காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டியுள்ளார். இந்தியா குடியாட்சி நாடு என்றால் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படவேண்டும் என பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications