தேர்தலை ஒட்டி தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்பிக்கள் அதிரடி மாற்றம் !
சென்னை: தமிழகத்தில் திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த காவல் துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக உள்துறை முதன்மை செயலர் அபூர்வா வர்மா வெளியிட்ட செய்தி குறிப்பு:
இடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் (அவர்கள் ஏற்கெனவே பணியாற்றிய இடம்)
1. எஸ்.பிரபாகன் - துணை ஆணையர், சட்டம், ஒழுங்கு, திருச்சி மாநகரக் கவல் (துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் மாநகரம்)
2. ஆர்.ஜெயந்தி - துணை ஆணையர், குற்றம், மதுரை மாநகரம் (துணை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து, திருச்சி மாநகரம்)
3. ஜி.உமையாள் - மதுரை மதுவிலக்கு பிரிவு கண்காணிப்பாளர், மதுரை மண்டலம் (துணை ஆணையர், குற்றம், மதுரை மாநகரம்)
4.பி.சக்திவேல் - துணை ஆணையர், சட்டம் ஒழுங்கு, திருச்சி மாநகரம் (மதுவிலக்கு கண்காணிப்பாளர், மதுரை மண்டலம்)
5. வி.சசி மோகன் - துணை ஆணையர், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் மாநகரம் (துணை ஆணையர், சட்டம் ஒழுங்கு, திருச்சி மாநகரம்)
6. பா.மூர்த்தி - துணை ஆணையர், தலைமையகம், கோவை மாநகரம் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அணி 4, கோவைபுதூர்)
7. எஸ்.மகேஸ்வரன் - மாவட்டக் கண்காணிப்பாளர், நாமக்கல் (துணை ஆணையர், தலைமையகம், கோவை மாநகரம்)
8.எஸ்.ஆர்.செந்தில் குமார் - துணை ஆணையர், தலைமையகம், சென்னை மாநகர் (மாவட்டக் கண்காணிப்பாளர், நாமக்கல்)
9. பி.பகலவன் - மாவட்டக் கண்காணிப்பாளர், வேலூர் (கண்காணிப்பாளர், வணிக குற்றம், சென்னை)
10.பி.கே.செந்தில் குமாரி - கண்காணிப்பாளர், வணிக குற்றம், சென்னை (மாவட்டக் கண்காணிப்பாளர், வேலூர்)
11.இ.எஸ்.உமா - மாவட்டக் கண்காணிப்பாளர், திருச்சி (மாவட்டக் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை)
12. எஸ்.ராஜேஸ்வரி - மாவட்டக் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை (மாவட்டக் கண்காணிப்பாளர், திருச்சி)
13.ஏ.சுப்பிரமணியன் (பதவி உயர்வு)- படைத்தலைவர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பிரிவு 4, கோவை புதுர் (துணை படைத் தலைவர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை பிரிவு 2, ஆவடி)