இலங்கை கடற்படையின் வெறித் தாக்குதல்- 4 மீனவர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil

கச்சத்தீவு அருகே இன்று காலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த கடற்படையினர் வந்துள்ளனர். பின்னர் மீனவர்களின் படகுகளைத் தாக்கினர். வலைகளைப் பிடித்து அறுத்து கடலில் வீசினர். இதில் 10க்கும் மேற்பட்ட வலைகள் சேதமடைந்து போய் விட்டன.
பின்னர் மீனவர்களையும் அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதில் மீனவர்கள் 4 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மீனவர்கள் கரைக்குத் திரும்பி விட்டனர். காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் எந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர் என்பதை மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications