சென்னை விமான நிலையத்தில் மலேசிய பயணிகளிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: உரிய ஆவணாங்கள் இன்றி தங்கம் கடத்தி வந்ததாக சென்னை விமான நிலையத்தில் இரண்டு பயணிகளிடம் இருந்து 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்று மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளித்தில் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இதயதுல்லா என்ற பயணியிடம் இருந்து 3.2 கிலோ தங்கமும், பிரேமா என்ற பயணியிடம் இருந்து 780 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் கொண்டு வந்ததால் சம்பந்தப்பட்ட இரண்டு பயணிகளிடமும் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications