டெல்லியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் 4 பேர் விடுதலை
டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 4 பேரை விடுவித்துள்ளது டெல்லி போலீஸ்.
பதன்கோட் விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் சிறப்பு படை போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். அ
வர்களிடமிருந்து அதி நவீன வெடி குண்டுகளும் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் டெல்லி சிறப்பு படை விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட 10 பேரில் நால்வரை போலீசார் விடுதலை செய்துள்ளனர்.
சரியான ஆதரங்கள் இல்லாததால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் நடத்த விசாரணைக்கு பின் டெல்லி போலீசார் விடுதலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இந்த 4 பேரில் 3 பேர் கிழக்கு டெல்லியின் சந்த்பாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் காஸியாபாத் லோனி பகுதியைச் சேர்ந்தவர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications