அம்மா உணவகங்களில் சர்க்கரைப் பொங்கலுடன் 3 வேளை "ப்ரீ "உணவு- ஜெ. பிறந்தநாள் ஸ்பெஷல்!
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று தொண்டர்கள் சார்பில் 68 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும், அம்மா உணவகங்களில் சர்க்கரை பொங்கலுடன் 3 வேளை இலவச உணவு இன்று வழங்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம், இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து அம்மா உணவகங்களிலும் சர்க்கரை பொங்கலுடன் காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளும் இன்று இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
அ.தி.மு.க.வினரும் கடந்த சில நாட்களாகவே ஜெயலலிதா வயதை குறிக்கும் வகையில் அதற்கேற்றார் போன்று பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு பிறந்தநாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications