சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி : புதுச்சேரி ஆளுநர் அதிரடி
சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
Recommended Video

புதுச்சேரி: சுத்தமான கிராமம் என்று சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண்பேடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கிராமங்களில் தூய்மைப்பணியை வலியுறுத்தும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் தற்போது புதிய கெடுபிடியை ஆளுநர் கிரண் பேடி கொண்டு வந்துள்ளார்.

சுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்று அவர் கூறியுள்ளார்.
சான்றிதழ் பெறும்வரை அரிசி சேகரிக்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும் என்று ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்ட பின் இதனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications