ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவினர்.. துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்திய முதல்வர்
தூத்துக்குடி படுகொலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடி படுகொலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி கூறியுள்ளார்.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

சமூக விரோதிகள்
தற்போது தூத்துக்குடி படுகொலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர் என்று அவர் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி கூறியுள்ளார்.இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஸ்டெர்லைட் போராட்டங்கள் அமைதியாக நடந்தன.ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி உள்ளனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது.

144 தடையுத்தரவு
சில விஷமிகளும், சில அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்தை மீறி நடத்தியுள்ளனர். மக்கள் முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். 144 தடையுத்தரவு இருக்கும்போது ஸ்டாலின் தூத்துக்குடி சென்றது தவறு. வேண்டுமென்றே திட்டமிட்டே போராட்டத்தில் சில அரசியல் கட்சிகள், சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வன்முறை நடந்துள்ளது.

வருத்தமான செயல்
முதலில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடியும்தான் நடத்தினர்.மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர் வன்முறையாளர்கள். இதனால் பிரச்சனை உருவானது. மோசமான சூழல் நிலவும்போது இப்படிப்பட்டநிகழ்வு நடந்துவிட்டது என்பது வருத்தமான செயல்.

திட்டமிட்ட செயல் இல்லை
துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல் கிடையாது.தற்காப்புக்காக போலீசார் சுட்டிருப்பார்கள். உங்களை ஒருவர் தாக்கினால் நீங்கள் திருப்பி தாக்குவீர்கள். அப்படித்தான் அங்கும் நடந்துள்ளது.உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீீசார் சுடவில்லை. அந்த சூழ்நிலையில் நடந்த சம்பவம் இது, என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications