மது பாட்டிலில் செத்து மிதந்த தவளை- வைரல் படத்தால் வலுத்து வரும் விவாதம்
சீர்காழி: சீர்காழியில் டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய பாட்டிலில் தவளை செத்து மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
40 நாட்கள் லாக்டவுனுக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபான கடைகள் 7-ந் தேதி முதல் திறக்கப்பட்டன.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மதுபான கடைகளை இழுத்து மூட உத்தரவிட்டது. இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று முன்தினம் மதுபான கடை ஒன்றில் வாங்கிய மதுபாட்டிலில் செத்த தவளை மிதந்து கிடந்தது. இதனை கண்ட குடிமகன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டியதுதான்.. ரஜினிகாந்த்
இது தொடர்பான படம் சமூக வலைதளங்களில் வைரலானக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் மது பாட்டிலில் தவளை செத்து கிடப்பதற்கான வாய்ப்பு எதுவுமே இல்லை என்று ஆளும் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியமே இல்லை என்பதற்கான வாதங்களையும் சமூக வலைதளங்களில் ஆளு தரப்பினர் முன்வைக்கின்றனர்.