ஒரு பேப்பருக்கு ரூ.10 ஆயிரம்.. ரூ.200 கோடி வரை லஞ்சம்.. அதிர வைக்கும் அண்ணா பல்கலை. ஊழல்!
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 200 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 200 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழகத்தை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் உலுக்கி இருக்கிறது. இன்ஜினியரிங் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.
ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள். 2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்து இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

யார் ஈடுபட்டது
அண்ணா பல்கலைக்கழக்த்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கும் கீழ் 100க்கும் அதிகமான பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் வேலை செய்பவர்கள்.

எதை பயன்படுத்தி
2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்து இருக்கிறது. அப்போது அண்ணா பல்கலையில் துணை வேந்தர் யாரும் இல்லாததை பயன்படுத்தி முறைகேடு நடந்து இருக்கிறது. அதே சமயம் இதில் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் யார் என்ற தகவல் இப்போதுவரை வெளியாகவில்லை.

எவ்வளவு வாங்கினார்கள்
ஒரு மாணவரை வெற்றிபெற செய்ய, அதிக மார்க் கொடுக்க 10 ஆயிரம் ரூபாய் வாங்கி இருக்கிறார்கள். மொத்தமாக மூன்று வருடத்தில் 2 லட்சம் மாணவர்களிடம் இப்படி பணம் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 2014 இறுதி முதல் இப்போது 2018 வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த பல ஆயிரம் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

அதிர்ச்சி தகவல்
தற்போது போலீஸ் இதில் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது. இதில் அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயம் என்னவென்றால் மொத்தம் 200 கோடி ரூபாய் வரை இதில் லஞ்சம் வாங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில உயர் அதிகாரிகளுக்கும் பணம் கைமாறி இருக்கிறது. இதனால் இந்த விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்தனர்
அதேபோல் இந்த லஞ்ச விவகாரத்தில் ஒத்துழைக்காத ஆசிரியர்களை மறுகூட்டல் பணியில் இருந்தும் நீக்கி இருக்கிறார் பேராசிரியர் உமா. அவர்கள் பேச்சை கேட்கும் நபர்களை மட்டுமே வைத்து பணியை செய்துள்ளனர். மேலும், இந்த முறைகேடான பேப்பர்களை எரித்து ஆதரங்களை அழிக்கவும் முயன்று இருக்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications