அரக்கோணம் தொகுதியில் முதன்முறையாக திருத்தணி...
அரக்கோணம்: லோக்சபாத் தேர்தலில் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளராக திருத்தணி கோ.அரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அரக்கோணம் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான திருத்தணியில் இருந்து இம்முறைதான் முதல் முறையாக அதிமுக வேட்பாளர் அறிவிக்கப் பட்டுள்ளார்.
திருத்தணி நீதிமன்ற வழக்கறிஞரான 54 வயது கோ.அரி, திருத்தணியை அடுத்த திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம் குப்பன்கண்டிகையைச் சேர்ந்தவர்.
இவர் கடந்த 2006 முதல் 2011 வரை திருத்தணி எம்எல்ஏவாகவும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றங்களின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
அரிக்கு அ.உஷாராணி என்ற மனைவியும், வருணா, பிரீத்தி, பவித்ரா என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2006 முதல் 2011 வரை திருத்தணி எம்எல்ஏவாகவும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றங்களின் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.