இலங்கை மனித உரிமை மீறலின் அத்தாட்சிதான் இசைப்பிரியா கொடூரம்.. வாசன்

Subscribe to Oneindia Tamil

G K Vasan expresses hope on PM's decision over Commonwealth summit
சென்னை: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்ததற்கு அத்தாட்சியாக இசைப்பிரியா கொடூரச் சம்பவம் நடந்துள்ளது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று முதல் மத்திய அமைச்சராக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியவர் வாசன். அவரைத் தொடர்ந்து ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், நாராயணசாமி, ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டோரும் பிரதமர் பயணத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை வந்த வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கருத்தாக இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.

நானும் பிரதமரை 2 முறை சந்தித்து பங்கேற்கக் கூடாது என்றும், தமிழர்களின் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரதமர் நல்லதொரு முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்ததற்கு அத்தாட்சியாக இசைப்பிரியா படுகொலை கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+