For Daily Alerts
Just In
சென்னையில், கஞ்சா விற்ற திருநங்கை சாந்தி கைது
சென்னை: சென்னையில் கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த திருநங்கை கைது செய்யப் பட்டுள்ளார்.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை சாந்தி. இவர் சூளைமேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, அதனை கூடுதல் விலை தெரிந்தவர்களுக்கு விற்று வந்துள்ளார்.
தகவலறிந்து அவரைக் கைது செய்த போலீசார், அப்போது அவர் வசம் இருந்த ஆறு மது பாட்டில்களையும், 200கிராம் கஞ்சா போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர்.
திருநங்கை சாந்தி மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.
Comments
English summary
A transgender was arrested in Choolaimedu on Tuesday for selling ganja and liquor.
Story first published: Wednesday, September 18, 2013, 16:56 [IST]