கொடைக்கானலில் சாக்கடைக் கழிவால் நிலச்சரிவு.. டீக்கடை சரிந்து வீட்டின் மீது இறங்கியது
கொடைக்கானல்: கொடைக்கானலில் பாதாளச் சாக்கடைக் கழிவினால் நிலச்சரிவு ஏற்பட்டு கடை சரிந்து விழுந்தது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதாரக் கேட்டினால் பாதிப்படைந்து வருகின்றனர்.

மேலும் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும் பல்வேறு மனுக்களையும் நகராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல்வேறு மனுக்களை அளித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரும் கழிவுநீரானது சரிவர பராமரிக்கப்படாத குழாய்களினால் சாலையின் கீழே உடைப்புகள் ஏற்பட்டு கழிவு நீரானது ஆங்காங்கே சிதறி ஓடியதால் அருகே உள்ள கடையின் கீழே அரிப்புகள் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் அந்தப் பகுதியில் வைத்திருந்த ஒரு டீக்கடை சரிந்து கீழே உள்ள வீட்டின் மேல் உடைந்து விழுந்தது .இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தினை பார்வையிட வந்த கொடைக்கானல் நகராட்சி தலைவர் ஸ்ரீதரை கல்லறை மேடு பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் 110 உணவு விடுதிகளின் சார்பாக தனியாரால் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் சரிவர பராமரிக்கப்படாமல் ,உள்ளதாகவும் அதனால் பாதாள சாக்கடைக்குள் செல்ல வேண்டிய கழிவுநீர், கசிந்து நிலத்தடி மண் சரிந்து இந்த கடை இடிந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர செயல்படாத காரணத்தினால் இதேபோல் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயமும், அந்தப் பகுதியில் உள்ள சுமார் 5000 குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பிரச்சினை குறித்து நகர்மன்ற தலைவர் ஸ்ரீதரிடம் கேட்டதற்கு 144 கோடி செலவில் நகராட்சி சார்பாக புதிய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், அதி விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications