சமையல் கேஸ் தட்டுப்பாடு 2 வாரங்களில் தீரும் – இன்டேன் நிறுவனம் உறுதி!
சென்னை: சென்னையில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடானது இன்னும் 2 வாரங்களில் சரி செய்யப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமையல் கேஸ் வினியோகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 12 லட்சம் பேரும், சென்னை நகரில் மட்டும் 12 லட்சம் வாடிக்கையாளர்களும் இதற்கு உள்ளனர்.

கேஸ் தட்டுப்பாடு:
கடந்த சில மாதங்களாகவே சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

30 நாட்கள் தாமதம்
பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் சிலிண்டர் வழங்கப்பட வேண்டும். ஆனால் 20 நாட்கள், 30 நாட்கள் வரை சிலிண்டரை பெற போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திரும்பப் பெற்றதால் பிரச்சனை:
பழைய மற்றும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லாத சிலிண்டர்கள் சரண்டர் செய்யப்பட்டதே இந்த பிரச்சினைக்கு காரணமாகும்.

புதிய சிலிண்டர்கள் தாமதம்:
உபயோகத்திற்கு தகுதியில்லாத சிலிண்டர்கள் திரும்ப பெறப்பட்டததால் அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் வருவதில் ஏற்பட்ட காலதாமதமே கேஸ் வினியோகிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தியது.

தொடரும் தட்டுப்பாடு:
இந்த நிலையில் தற்போது 2 லட்சம் புதிய சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஆனாலும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது.

படிப்படியாக குறையும்:
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி ஒருவர், "சமையல் கேஸ் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்து விட்டது. தற்போது பதிவு செய்து ஒரு வாரத்திற்குள் சிலிண்டர் வினியோகம் செய்ய வேண்டும்.

2 லட்சம் புதிய சிலிண்டர்கள்:
புதிதாக 2 லட்சம் சிலிண்டர்கள் வந்துள்ளன. இதனால் இனி தட்டுப்பாடு ஏற்படாது. ஒரு சிலர் சிலிண்டர்களை வாங்கி இருப்பு வைத்துக் கொள்கின்றனர். இதனால் சிலிண்டர் வினியோகம் செய்வதில் காலதாமதமாகிறது.

முறைகேடு பற்றி புகார்:
இன்னும் 2 வாரத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு முழுமையாக சீராகும். கேஸ் ஏஜென்சீஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் முறைகேடாக வினியோகம் செய்தால் எங்களுக்கு புகார் கூறலாம். எழுத்துபூர்வமாக கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications