பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: 80 குழந்தைகள் தப்பினர்
திருத்தணி: திருத்தணியில் பள்ளி சத்துணவு கூடத்தில் கேஸ் கசிவு காரணமாக தீ பற்றியது. இது அருகில் இருந்த பள்ளிக்கும் பரவியது மாணவர்கள் அனைவரும் வெளியே ஓடியதால் எந்த வித ஆபத்தும் இன்றி உயிர்தப்பினர்.
திருத்தணி ஒன்றியம், செருக்கனூரில் ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, 80 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்காக, பள்ளி அருகில் உள்ள சமையல்கூடத்தில் மதிய உணவு சமைக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணிக்கு, சமையல்கூடத்திற்கு சென்ற அம்பிகா மற்றும் சின்னபொன்னு என்ற இரு ஊழியர்கள், சமையலுக்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்தனர். அப்போது திடீரென அறை முழுவதும் தீ பற்றியது. ஊழியர்கள் இருவரும் அலறி அடித்து ஓடினர்.
புகை வந்ததை பார்த்த பள்ளி குழந்தைகளும் வகுப்பறைகளை விட்டு வெளியே ஓடினர். தகவல் அறிந்த திருத்தணி தீ அணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக 80 குழந்தைகளும் தப்பி உள்ளனர். கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேக்கிக்கப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications