"அம்மா"வின் ஆசி பெற்ற கிரிஜா வைத்தியநாதன்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் முன்பு ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்த்து பெற்றவர் தற்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன்.
சென்னை: முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த காலத்தில் அவரிடம் வாழ்த்து பெற்றவர்தான் புதிய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. 1981ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், அப்போது தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றிருந்தார். அவ்வாறு பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதனும் சேர்ந்து சென்று முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

சக பேட்ஜை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், ரா.கண்ணன், கே.கணேசன், அசோக்குமார் குப்தா, ராஜீவ் நயன் செளபே ஆகியோர் அப்போது கிரிஜாவுடன் சேர்ந்து ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்றனர்.
அப்போது, டாக்டர். பி.வேணுகோபால், எம்.பி., நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக பொறுப்பேற்கவிருந்தார். அவரும் இந்த அதிகாரிகளுடன் சேர்ந்து வாழ்த்து பெற்றார்.
ஜெயலலிதாவின் அருகே நிற்கும் வாய்ப்பு கிரிஜா வைத்தியநாதனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவரது மகன் திருமணத்தின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். எனவே தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளுடனும் கிரிஜா வைத்தியநாதன் சுமுகமாகவே நடந்து கொண்டதாகவும், எந்த கட்சியுடனும் அவர் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டதில்லை எனவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் கறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications