நாமக்கல்: கொதிக்கும் நீரில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி
நாமக்கல்: கொதிக்கும் நீரில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மதுரையில் குளிர்பானம் என நினைத்து பேன் மருந்தை குடித்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுடுநீரில் விழுந்து மரணமடைந்த சிறுமியின் பெயர் தான்யா என்பதாகும். தான்யாவின் தாயார் மகளை குளிக்க வைப்பதற்காக நன்றாக கொதிக்க வைத்த சுடுநீரை ஒரு வாளியில் ஊற்றி வைத்து விட்டு சமையல் அறைக்கு சென்றிருந்தார். அப்போது திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்கவே, வேகமாக வந்து எட்டிப்பார்த்தார். அந்த வாளிக்கும் சிறுமி தான்யா விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள்.

உடனே பதறிய சிறுமியின் தாயார், குழந்தையை எடுத்துக் கொண்டு உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் சிறுமியின் உடல் முழுவதும் வெந்து போனதால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தான்யா உயிரிழந்தாள். இது குறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் மதுரையில் குளிர்பானம் என நினைத்து பேன் மருந்தை குடித்த 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, மோதிலால் 2வது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் துர்காலட்சுமி , 4. வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பள்ளியில் எல.கே.ஜி. படித்து வந்தார்.
செவ்வாய்கிழமையன்று அவது வீட்டில் குளிர்பான பாட்டிலில் வைக்கப்பட்டிருந்த, பேன் மருந்தை, குளிர்பானம் என நினைத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுமியை ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
அஜாக்கிரதையால் இருவேறு இடங்களில் இளம் பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர்கள், உயிருக்கு ஆபத்தான பொருட்களை கையாள வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications