தொடர்ந்து சிறுநீர் வெளியேறி அவதியுற்ற சிறுமி.. ஆபரேஷனில் சரி செய்து சாதனை படைத்த சென்னை ஜி.எச்.!
சென்னை: தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் தொல்லையால் அவதிப்பட்ட சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் கூடுதல் சிறுநீர் குழாயை வழக்கமான குழாயுடன் இணைத்து, அச்சிறுமிக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளனர் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மதிவாணன் என்பவரின் மகள் தேன்மொழி (13). தொடர்ந்து சிறுநீர் வெளியேறும் பிரச்சினையால் இவர் தவித்து வந்துள்ளார். இதற்கான சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தேன்மொழி. அங்கு அவரது பிரச்சினையை, அரிய அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் தீர்த்து வைத்துள்ளனர்.

இது குறித்து சென்னை அரசு பொது மருத்துவமனை, 'டீன்' விமலா, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை டாக்டர் செல்வராஜ் ஆகியோர் கூறியதாவது:-
தொடர்ந்து சிறுநீர் வெளியேறியதால் சிறுமி அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக அறுவை சிகிச்சை துறை மூலம் பரிசோதனைகள் செய்ததில், இடது பக்க சிறுநீரகம் ஒன்றாக இருந்தாலும் இரண்டு அறைகள் கொண்டிருந்தன. வழக்கமாக இருக்கும் ஒரு சிறுநீர் குழாய்க்கு பதிலாக ஒவ்வொரு அறையிலும் ஒரு சிறுநீர் குழாய் இருந்தது.
அதில் ஒன்று சிறுநீர் பையில் இணையாமல் பிறப்பு உறுப்பை ஒட்டி சிறு துளையில் இணைந்திருந்தது. இதனால், சிறுநீர் பைக்கு செல்லாமல் சிறுநீர் தொடர்ந்து வெளியேறியது தெரிய வந்தது.

இதையடுத்து இரண்டாவது சிறுநீர் குழாயைத் துண்டித்து வழக்கமான பாதையுடன் இணைத்தோம். மிகவும் அரிய வகை அறுவைச் சிகிச்சை இது.
மூன்று மணி நேர அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்து நான்கு மாதங்கள் ஆகி விட்டன; சிறுமி நலமாக உள்ளார். இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில், மூன்று லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், இது தமிழக முதல்வர் மருத்துவ காப்பீட்டில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
பிறவியில் ஏற்படும் மாறுபட்ட சிறுநீரகக் குழாய்கள் இருப்பது உலக வரலாற்றில் இது முதல் முறை. இதுவரை பதிவுகள் இல்லை. இதை பதிவு செய்ய அனுப்பி உள்ளோம்' என்றனர்.
சென்னை அரசு மருத்துவர்களின் ஆபரேஷன் மூலம் நலம் பெற்ற சிறுமி தேன்மொழி கூறுகையில், "சிறு வயதில் இருந்தே தொடர்ந்து சிறுநீர் வெளியேறும். வகுப்பறையிலும் சிறுநீர் கழித்து விடுவேன். எல்லாரும் கிண்டல் செய்ததால் பள்ளி செல்ல தயக்கமாக இருந்தது. இப்போது, என் பிரச்னை தீர்ந்து விட்டது. நிம்மதியாக உள்ளேன். இனி என்னை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். 9ம் வகுப்புக்கு தடையின்றி செல்வேன். அரசுக்கும், டாக்டர்களுக்கும் நன்றி'' என கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications