வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதியில் வந்து போராடு... மாணவியின் ஆவேசம்
வேடிக்கை பார்க்காமல் வீதிக்கு வந்து தமிழக மக்கள் போராட வேண்டும் என்று கோவை வ.உசி. மைதானத்தில் போராட்டம் நடத்தி வரும் மாணவி ஒருவர் கூறினார்.
கோவை: இந்தப் போராட்டத்தை சாதாரணமாக பார்க்காதீர்கள். இது தொடக்கப் புள்ளிதான். இனி ஒவ்வொரு பிரச்சினைக்கும் மாணவர்கள் போராட்டக் களத்தில் குதிப்போம் என்று கோவை வ.உ.சி மைதானத்தில் இரவு முழுவதும் நடந்த போராட்டத்தின்போது மாணவியர் ஆவேசமாக கூறியது அனைவரையும் தட்டி எழுப்புவதாக உள்ளது.
தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெருவில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் பல நகரங்களிலும், மாவட்டங்களிலும் பரவியுள்ளது. அலங்காநல்லூரில் சிறு பொறியாக கிளம்பிய இப்போராட்டம் தற்போது சென்னை மெரீனா, கோவை வ.உ.சி. மைதானம் என பரவியுள்ளது.

கோவையில் கூடியுள்ள மக்களில் பெரும் திரளானவர்கள் பெண்கள் குறிப்பாக கல்லூரி மாணவிகள். தங்களது போராட்டம் ஏதோ ஒரு கோரிக்கைக்காக அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் விடிவுக்காக என்று அவர்கள் அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்கள்.
போராட்டக் களத்தில் நேற்று முழுவதும் விடிய விடிய அமர்ந்திருந்த ஒரு மாணவி கூறுகையில், ஒவ்வொரு பிரச்சினைக்கும் இனி மாணவர்கள் போராட்டக் களத்தில் குதிப்போம். இதுதான் தொடக்கப் புள்ளி. எங்களுடன் யாரும் பேச்சு நடத்தத் தேவைில்லை. யாரும் பேச்சு நடத்த வர வேண்டாம். வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும். அவசரச் சட்டம் பிறப்பிக்கும் வரை நகர மாட்டோம். ஒரு நடிகருக்காக சுப்ரீம் கோர்ட் பல மணி நேரம் உட்கார்ந்து விசாரிக்கிறது. இதற்காக உட்கார முடியாதா.

இந்தப் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களுக்காகவும்தான். இதை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கும் சேர்த்துதான் போராடிக் கொண்டுள்ளோம். வேடிக்கை பார்க்கும் தமிழினமே வீதியில் வந்து போராடு என்று ஆவேசமாக கூறினர்.
புகைப்படம்: பேராசிரியர் கே.கே.நடராஜன்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications