மீண்டும் தமிழ் மாநில காங்கிரசா?- ஜி.கே.வாசன் மறுப்பு: கூட்டணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சியாம்!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த சில மாதங்களாகவே ஜி.கே. வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. அவரது ஆதரவாளர்களும் அவ்வப்போது தமிழ் மாநில காங்கிரஸை தொடங்க வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் பல்வேறு நிலைப்பாடுகளையும் மத்திய அமைச்சராக இருந்தும்கூட ஜி.கே. வாசன் எதிர்த்தே வருகிறார். இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கி, லோக்சபா தேர்தலில் திமுக அல்லது அதிமுக அல்லது தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பார் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை எண்ணூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வாசன், தேமுதிக போன்ற மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் மகிழ்ச்சி. தற்போதைய நிலையில் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கு இல்லை. தேசிய அளவில் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை விரைவில் முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications