சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் விரைவில் கைது? #vaikundarajan
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்த் ஆகியோர் சட்டவிரோத தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்ததாக விரைவில் கைது செய்யப்படக் கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோ கடந்த திங்கள்கிழமையன்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதே நாளில் மேலும் 6 அதிகாரிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த 6 அதிகாரிகளில் 3 பேர் புவியியல் மற்றும் சுரங்கத்துறையை சேர்ந்தவர்கள்; மற்ற 3 பேரும் சுற்றுச் சூழல் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்.

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிருப்தி
எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் திடீரென ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கடந்த 1-ந் தேதியன்று கூடி ஆலோசனையும் நடத்தியிருந்தது.

ஆதாரங்கள் தர மறுப்பு
இந்த நிலையில் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தது, மின்சார கொள்முதல் முறைகேடுகள் உள்ளிட்ட புகார்களில் ஞானதேசிகனும் அதுல் ஆனந்தும் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. சட்டவிரோத தாது மணல் விவகாரத்தில் வைகுண்டராஜனை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்களை ஞானதேசிகனும் அதுல் ஆனந்தும் தர மறுத்தாக கூறப்படுகிறது.

சசிகலா புஷ்பா
தற்போது முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை வைகுண்டராஜன் தூண்டிவிடுவதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் கோபமடைந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, வைகுண்டராஜனை கைது செய்வதில் தீவிரம் காட்டுவதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரண்டர் வைகுண்டராஜன்
இதனையடுத்தே வைகுண்டராஜன், தாம் சசிகலா புஷ்பாவை தூண்டிவிடவில்லை என தமது நியூஸ் 7 தொலைக்காட்சியில் விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால் உளவுத்துறை தகவல்களோ வைகுண்டராஜனே சசிகலா புஷ்பாவை இயக்குவதாக கூறுகிறது.

அடுத்தடுத்து கைது?
இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஞானதேசிகன், அதுல் ஆனந்த் ஆகியோரும் கைது செய்யப்படக் கூடும் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications