மாநில சுயாட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் ஆளுநர் வெளியேறும் வரை போராடுவோம் - ஸ்டாலின்
காவிரி பிரச்சினையை திசை திருப்பும் நோக்கத்தில் எச். ராஜாவும், ஆளுநரும் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவதாகவும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் நடைபெறும் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், எச்.ராஜாவின் அநாகரீக டுவிட், ஆளுநர் செயல்பாடுகள் பின்னணியில் சந்தேகம் இருப்பதாக கூறினார். காவிரி பிரச்சினையை திசை திருப்பும் நோக்கத்தில் செயல்பாடுகள் இருக்கிறது.
நிதிக்குழு பரிந்துரை விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளது
ஊழல்கள் வெளிவரும் என்பதால் லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசு தயங்குகிறது. மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப்பெறும் வரை போராட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும். ஆளுநர் நியமித்துள்ள விசாரணை குழுவால் உண்மை வெளிவராது என்று தெரிவித்த ஸ்டாலின், இந்த விவகாரத்தில் ஆளுநரே சம்பந்தபட்டுள்ளதால் சிபிஐ விசாரணை அவசியம் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.