அரசியல் குதிப்பா? ஆண்டவன் தீர்மானிப்பான்... விலை போன ரசிகர்கள்... என்னதான் சொன்னாரு ரஜினிகாந்த்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியலுக்கு தாம் வரநினைத்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ரசிகர்களை 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது ரஜினிகாந்த் அரசியல், ரசிகர்கள், இலங்கை பயணம், புதிய படம் என பலவிஷயங்களைம் 'தொட்ட மாதிரி' பேசினார்.

ஆனால் எந்த விஷயத்திலும் தெளிவான போட்டுடைக்கும் பேச்சே இல்லை. வழக்கம் போலவே ரசிகர்களையும் பொதுமக்களையும் குழப்பியடிக்கும் பேச்சாகத்தான் இருந்தது.
- இலங்கை பயணத்தை சில காரணங்களால் கேன்சல் செய்தேன்.
- முதலைகள் இருக்கிறது என்பதை தெரிந்த பின்னரும் கால் வைக்கும் முரட்டும் தைரியம் இருக்கக் கூடாது
- 21 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தந்தது அரசியல் விபத்து
- ரசிகர்களை சில அரசியல்வாதிகள் பணத்துக்காக பயன்படுத்துகின்றனர்.
- ரசிகர்களும் பலரும் அரசியல்வாதிகளை பயன்படுத்திக் கொண்டனர்
- இன்று நடிகர்.. .நாளை நான் யார் என்பதை ஆண்டவனே முடிவு செய்தார்.
- சூழ்ந்லையால் அரசியலுக்கு வந்தாலும் பணம் சேர்க்க ஆசைப்படுகிறவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்
- வரும் 28-ந் தேதி புதிய படம் தொடங்குகிறேன்
- படம் ரிலீஸாகும்போதுதான் நான் ரசிகர்களை சந்திப்பதாக சிலர் சொல்கின்றனர். உண்மை அதுவல்ல
- இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.












Click it and Unblock the Notifications