For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜன்னலோரமாக படுத்திருந்த ஹேமமாலினியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலி அபேஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சங்கிலிப் பறிப்புத் திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

சாலையில் நடந்து செல்வோர், தனியாக செல்வோர், இருளான பகுதியில் செல்வோர் என எவரையும் இவர்கள் விடுவதில்லை.

அதிகாலையிலும், இருட்டிய பிறகும்தான் இவர்கள் அட்டகாசம் செய்கின்றனர். இந்த நிலையில் மடிப்பாக்கத்தில் இரவில் ஜன்னலோரமாக படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.

மமடிப்பாக்கம், பஜனைகோவில் தெருவை சேர்ந்தவர் ஹேமாமாலினி, 23. ஜன்னல் ஓரம் படுத்திருந்த இவரின் 9 சவரன் நகையை காணவில்லை. திருடர்கள் திருடி விட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது

போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A gold chain was looted from a 23 year old girl in Chennai Madipakkam. The girl was sleeping near the window in her house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X