படுக்கையில் கிடந்தப்ப கூட கோமதிதான் வேணும்னு சாதிச்சாருப்பா பெரிசு.. கலகலக்கும் கோலிவுட்!
பெரியவங்க படுக்கையில் கிடந்தப்ப கூட கோமதியை கேட்டு சாதிச்சவராம் பெரியவரு என்கிறது கோலிவுட்.
Recommended Video

தமிழ் சினிமாக்கள் எல்லாமே வெளிநாட்டு படங்களை பார்த்து காப்பியடிக்கிறதா பொங்குகிறவர்கள் அதிகம்..
உண்மையில் வைகை புயல் வடிவேலு சொல்வதைப் போல நம்மை சுற்றி நடப்பவையே கதாபாத்திரங்கள்..
தமிழ் சினிமாக்களில் வில்லனாக ஏதாவது பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களை காட்டுவார்கள்... பேத்தி வயது பொண்ணுகளை வளைத்துப் போட அல்லக்கைகளை அனுப்புவார்கள்.. காரியம் சாதிக்க நினைப்பவர்கள் நட்சத்திரங்களை தாரை வார்ப்பார்கள்..
அப்படித்தான் கோட்டைக்காரர் ஒருத்தரின் கும்மாளம் கோடம்பாக்கத்து கிளிகளை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறது..
பூசணிக்காய் உடைச்சதுக்கு பின்னாடி நல்ல லாபம் பார்க்கிறதுக்கு ஒரு கடுதாசி தேவை.. அந்த கடுதாசி தரும் இடத்தில் இருப்பவரோ அப்படியே சினிமா கதாபாத்திரம்..
பல்லுப் போன பெல்லாருக்கு ஏற்கனவே அப்பீசியலாக இரண்டு. ஒருவர் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார். மற்றொருவர் இருக்கிறார்.
இருந்தாலும் கடுதாசி கேட்டு வருபவர்களை ஒருநாளும் காக்க வைக்கவே மாட்டார்... சட்டு புட்டென முடிச்சு கொடுத்துடுவார்.. அதுக்கான சார்ஜை கூட அல்லக்கைகளே அவங்க கல்லா பெட்டியிலேயே போட்டுக்குவாங்க..
பெரியவருக்கு தேவை நட்சத்திரம்தான்.. அவ்வளவுதான்...
இதுல இன்டஸ்ட்டிரியே விழுந்து விழுந்து சிரிச்சு சொல்ற விஷயமே.
"அவுக பெரியவங்க படுத்த படுக்கையாக கிடந்தப்ப கூட கோமதிதான் வேணும்னு நின்னு சாதிச்சாருப்பா' பெரிசு என்பதுதான்












Click it and Unblock the Notifications