காவிரி பந்த்: திண்டுக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு!
தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் திண்டுக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திண்டுக்கல் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தின் போது கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி என்கிற இடத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் மற்றும் லாரிகள் மீது மர்மநபர்கள் கல்வீசித்தாக்குதல் நடத்தியதில், கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டத்திலும் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் போராட்டத்தில் பத்து அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், திண்டுக்கல்- பழநி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, லியோனி மற்றும் பழநி எம்.எல்.ஏ. செந்தில்குமார் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.