அரசு கேபிள் டி.வி. எம்.டி மீது "கை" வைத்த லக்கானி... எதிர்க்கட்சிகள் புகார் எதிரொலி.. அதிரடி மாற்றம்
சென்னை: எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து, அரசு கேபிள் டி.வி. மேலான் இயக்குநர் குமரகுருபரனை மாற்றம் செய்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களும், அரசு கேபிள் டி.வி. மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக செய்தி வெளியிடும் சேனல்கள் திட்டமிட்டு தடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. அதோடு, அரசு கேபிள் டி.வி.யில், அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்களுக்கு மட்டுமே ஒளிபரப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கட்சி சார்ந்த தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமின்றி, நடுநிலையோடு செய்தி வெளியிடும் தொலைக்காட்சி சேனல்களும் புறக்கணிக்கப்படுவதாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது.
மற்ற கட்சிகளும் இதே புகாரைக் கூறியதைத் தொடர்ந்து, இது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, அரசு கேபிள் டி.வி. மேலான் இயக்குநர் குமரகுருபரனை மாற்றம் செய்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராகேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இது போதாது என்றும், அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவரான உடுமலை கே.ராதாகிருஷ்ணனையும் மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவருக்குப் பதிலாக தனியாக தேர்தல் பார்வையாளர் ஒருவரை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த ராதாகிருஷ்ணன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும், தற்போது உடுமலை சட்டசபைத் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications