மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள் மீது ஒரு கண் வையுங்கள்... அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில் பட்டம் விட உபயோகிக்கப்படும் மாஞ்சா நூல்களை தயாரிப்பவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் ஆர்.கோபிகா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "சென்னையில் காத்தாடி விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாஞ்சா நூல் அறுந்து சாலைகளில் விழுவது வழக்கமாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு எழும்பூரில் தந்தையின் மோட்டார் சைக்கிளில் முன்பு உட்கார்ந்து பயணம் செய்த குழந்தையின் கழுத்தை இந்த நூல் அறுத்ததால், அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
வடசென்னையில் இதுபோல் மாஞ்சா நூல் அறுத்து இரு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். எனவே, மாஞ்சா நூலை பயன்படுத்தி காத்தாடி விடுவதை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்று கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தேன். அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், காத்தாடி விடுவதற்காக ஒவ்வொரு வார்டிலும் தனியாக இடம் ஒதுக்க வேண்டும் அரசு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த ஹைகோர்ட், மாஞ்சா நூலை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உள்துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், "கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி என்னுடைய தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, காத்தாடி வியாபாரி சங்கம், தமிழ்நாடு காத்தாடி பறக்க விடும் சங்கம் ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் மாஞ்சா நூல் தயாரிக்க மாட்டோம் என்றும் மாஞ்சா நூல் மூலம் காத்தாடியை பறக்க விட மாட்டோம் என்றும் கூறினார்கள்.
மேலும், சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் காத்தாடி பறக்க விட தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. அவ்வாறு தனி இடம் ஒதுக்க முடியாது. மேலும், காத்தாடி பறக்கவிட சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், "மாஞ்சா நூலை யார் தயாரிக்கின்றனர்? அதை தயாரிக்க மூலப்பொருட்கள் எங்கிருந்து வருகிறது? இவற்றை எல்லாம் தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.
-
டாஸ்மாக் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு.. மே 31 வரை மட்டுமே அவகாசம்.. தமிழக அரசை கண்டித்த உயர்நீதிமன்றம் -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications