நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த அரசுப் பள்ளி ஆசிரியை.. வேலையை உதறினார்!

நீட் தேர்வுக்கு எதிராக அரசு பள்ளி ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்தார்.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: நீட் தேர்வுக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியை தனது பணியை ராஜினாமா செய்தார்.

நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு கலைந்துவிடும் நிலை உள்ளது. இதற்கு அனிதா என்ற அரியலூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 6 நாள்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.

நீட்டுக்கு எதிராக போராட்டம்

நீட்டுக்கு எதிராக போராட்டம்

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது மகனுடன் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது அந்த போராட்டத்துக்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ராஜினாமா செய்தார்

ராஜினாமா செய்தார்

இதனால் தனது ஆசிரியை பணியை சபரிமாலா ராஜினாமா செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வி மீதான அக்கறை

கல்வி மீதான அக்கறை

இந்த காலத்தில் உதவியாளர் வேலை கிடைத்தாலும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று முதுநிலை பட்டதாரிகள் போராடி வரும் வேளையில் தனக்கு கிடைத்த ஆசிரியை பணியை நீட் தேர்வுக்காக ராஜினாமா செய்ததில் இருந்து வருங்கால இந்தியா மீதும் மாணவர்கள் மீதும் அவர் வைத்துள்ள அக்கறை புலப்படுகிறது.

நீட் கடினம்

மேலும் நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்களுக்கு கடினம் என்பதும் இவரது ராஜினாமா மூலம் வெளிப்படுகிறது. இன்றும் மாணவர்கள் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+