குடியரசு தினத்திற்கு முன்பாக போராட்டத்தை கலைக்கத்தான் அவசர சட்டமா? மக்கள் ஆக்ரோஷம்
மதுரை: வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை அமைதியாக கொண்டாடுவதற்காகவே, மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை ஏமாற்றுகிறது என்பது போராட்டக்காரர்களில் பெரும்பான்மையானோர் குற்றம்சாட்டுகிறார்கள்.
அவசர சட்டமே நிரந்தர சட்டமாக மாறும் என முதல்வர் கூறுவதை அவர்கள் ஏற்பதாக இல்லை. சட்டசபை நாளை கூடும் நிலையில் அதிலேயே ஜல்லிக்கட்டு அவசர சட்டம் முன்வரைவு தாக்கல் செய்யப்படும் என்று பன்னீர்செல்வம் கூறிவருகிறார். ஆனால் சட்டத்தை நிறைவேற்றிவிட்டு ஜல்லிக்கட்டை நடத்தலாமே என்று பொதுமக்கள் பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.

குடியரசு தின விழா மெரினாவில் நடைபெற வேண்டிய நிலையில், மக்கள் போராட்டத்தை ஒடுக்க, அவசர சட்டத்தை பயன்படுத்துவதாகவே பலரும் குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டுமானால், நாளை சட்டசபையில் சட்ட வரைவு தாக்கல் செய்து அதை சட்டமாக இயற்றுவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications