பெரும்பான்மை இல்லாத எடப்பாடி- ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியிடம் முறையீடு- துரைமுருகன்

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாத நிலையில் ஜனாதிபதியை சந்திப்போம் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் என சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, ஜெ. அன்பழகன், ராஜேந்திரன் மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இன்று நேரில் சந்தித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மைனாரிட்டி அரசாகிவிட்டது. மைனாரிட்டி அரசு ஆட்சி செய்யக் கூடாது என்கிறது அரசியல் சாசனம்.

எதிர்க்கட்சிகள் பலம்

எதிர்க்கட்சிகள் பலம்

தமிழக சட்டசபையில் 233 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 233 எம்.எல்.ஏக்களில் திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 மற்றும் தினகரன் கையில் 22 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.

113 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு

113 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு

தற்போதைய நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 113 எம்.எல்.ஏக்கள்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணி பிரிந்த நேரத்தில் 15 நாட்களுக்குள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டவர் ஆளுநர்.

பெரும்பான்மையை நிரூபிக்க...

பெரும்பான்மையை நிரூபிக்க...

தற்போதும் அதே போல ஒரு நடவடிக்கையை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தினோம். சட்டசபையை உடனே கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினோம்.

உரிய நடவடிக்கை

உரிய நடவடிக்கை

ஆளுநரும் நடக்கின்றன அனைத்து நிகழ்வுகளையும் கேட்டு வருகிறேன். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திப்போம்

ஜனாதிபதியை சந்திப்போம்

தமிழக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த நிலைக்கு ஆளுநர் செல்லவிடமாட்டார் என நம்புகிறோம்.

கனிமொழி கருத்து

கனிமொழி கருத்து

இவ்வாறு துரைமுருகன் கூறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கையை மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்றார். காங்கிரஸ் கொறடா விஜயதாரணி, முஸ்லிம் லீக் அபுபக்கர் ஆகியோரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+