ஆளுநர் ஏன் மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்? முத்தரசன் சொல்வதை கேளுங்கள்
பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே மாவட்டங்களில் ஆளுநர் ஆய்வு செய்வதாக முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
திருத்துறைப்பூண்டி : தமிழக அரசியலில் ஏற்பட்டு இருக்கும் நிர்வாக சிக்கல்களில் இருந்து மக்களை திசை திருப்பவே ஆளுநர் அடிக்கடி ஆய்வு மேற்கொள்கிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். அப்போது, மாநில அரசில் எப்போது எல்லாம் நிர்வாக சிக்கல்கள் எழுகிறதோ அதை மறைக்கும் விதமாக ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

மாவட்டங்களில் தன்னிச்சையாக ஆளுநர் ஆய்வு மேற்கொள்வது மாநில உரிமையை பாதிக்கும் செயல் என்றும், கூட்டாச்சி தத்துவத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஆளுநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மாநில அரசை காப்பாற்றவே ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார். இதற்கு பிண்ணனியில் இருப்பவர்கள் யார் என்று மக்களுக்கு நன்கு தெரியும். மத்திய அரசு இதுபோன்ற செயல்களை கைவிட வேண்டும்.
மேலும், முத்தலாக் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றாமல், எதிர்கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு முத்தரசன் கோரிக்கை வைத்து உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications