ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா! ராஜபாளையத்தில் ஆளுநர் ரவி பேச்சு!
விருதுநகர்: ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா என ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.
இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ரிஷிகளிடம் இருந்தும் வேதங்களில் இருந்தும் கிடைத்த அறிவொளி தான் மக்களை வழிநடத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவியின் பேச்சுக்களும் கருத்துக்களும் அவ்வப்போது மிகுந்த பரபரப்பை உருவாக்கும். கடந்த அக்டோபர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று கூறியிருந்தார். திருவள்ளுவர் திருக்குறளில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டைப் பற்றியோ குறிப்பிடாத போது ஆன்மிகத்துக்கும் குறளுக்கும் என்ன சம்பந்தம் என கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக எதிர் வினையாற்றினர்.

ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி
இதேபோல் சனாதனம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு டி.ஆர்.பாலு மிக காட்டமான பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா எனவும் இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

கலந்துரையாடல்
மேலும், ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் பயிலும் மாணவர்களுடன் சிறிது நேரம் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். இதுமட்டுமல்லாமல் அவர்களுடன் ஆர்வமாக குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். முன்னதாக ஆளுநர் ரவியின் ராஜபாளையம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில்
முன்னதாக ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்ற ஆளுநர் ரவி அங்கு வழிபாடு நடத்தினார். அங்கு அவருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் ஆண்டாள் கோயில் யானை ஆசிர்வாதமும் செய்தது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications