ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா! ராஜபாளையத்தில் ஆளுநர் ரவி பேச்சு!
விருதுநகர்: ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா என ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.
இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ரிஷிகளிடம் இருந்தும் வேதங்களில் இருந்தும் கிடைத்த அறிவொளி தான் மக்களை வழிநடத்துவதாகவும் கூறியிருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவியின் பேச்சுக்களும் கருத்துக்களும் அவ்வப்போது மிகுந்த பரபரப்பை உருவாக்கும். கடந்த அக்டோபர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நமது ஆன்மிகத்தின் ஆதாரம் திருக்குறள் என்று கூறியிருந்தார். திருவள்ளுவர் திருக்குறளில் எந்த மதத்தைப் பற்றியோ, மொழியைப் பற்றியோ, இறை வழிபாட்டைப் பற்றியோ குறிப்பிடாத போது ஆன்மிகத்துக்கும் குறளுக்கும் என்ன சம்பந்தம் என கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக எதிர் வினையாற்றினர்.

ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி
இதேபோல் சனாதனம் குறித்த ஆளுநரின் கருத்துக்கு டி.ஆர்.பாலு மிக காட்டமான பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ராஜபாளையத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவானது தான் இந்தியா எனவும் இந்தியா ராஜாக்களால் உருவாக்கப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

கலந்துரையாடல்
மேலும், ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதி வேத பாடசாலையில் பயிலும் மாணவர்களுடன் சிறிது நேரம் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். இதுமட்டுமல்லாமல் அவர்களுடன் ஆர்வமாக குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். முன்னதாக ஆளுநர் ரவியின் ராஜபாளையம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில்
முன்னதாக ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயிலுக்கு தனது மனைவியுடன் சென்ற ஆளுநர் ரவி அங்கு வழிபாடு நடத்தினார். அங்கு அவருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன் ஆண்டாள் கோயில் யானை ஆசிர்வாதமும் செய்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications