பயங்கர விபத்தில் பலியான உயிர்கள்.. கலங்கி வேதனை தெரிவித்த ஆளுநர் ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று நடந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில் லாரி, கார்கள் என அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. பாலத்தின் மீது லாரி மற்றும் கார்கள் தீப்பிடித்து எரிந்தன. ஒரு லாரி பாலத்தில் இருந்து தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே பாய்ந்தது. இந்தக் கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கோர விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "தருமபுரியில் தொப்பூர் கணவாய் சாலையில் நடந்த பயங்கர சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வருத்தமளிக்கிறது. உறவுகளை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொப்பூர் கோர விபத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தர்மபுரி - தொப்பூர் கணவாய் பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இத்துயர சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிச்சயம் துணை நிற்கும்." எனத் தெரிவித்துள்ளார்.
More the reason why we are insisting on the speedy implementation of the Sanctioned elevated highway at Thoppur Ghat section in Dharmapuri.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) January 24, 2024
These are the visuals of today’s accident at Thoppur Ghat.@NHAI_Official @nitin_gadkari pic.twitter.com/l6QHVp4M3i
தருமபுரி எம்.பி செந்தில் குமார் தனது சமூக வலைதள பதிவில், "தருமபுரியில் தோப்பூர் கணவாய் பிரிவில் உயர் நெடுஞ்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த இதற்காகத்தான் வலியுறுத்தி வருகிறோம். தோப்பூர் கணவாயில் இன்று நடந்த விபத்தின் காட்சிகள் இவை." எனத் தெரிவித்து, மத்திய சாலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டேக் செய்துள்ளார்.
தொப்பூர் கணவாய் பகுதிதான் இந்தியாவிலேயே மிக அதிகமாக நடைபெறும் பகுதியாக உள்ளது. இதனை தடுக்க ரூ.775 கோடி மதிப்பில் Elevated Highway அமைக்க மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து ரூ.775 கோடி டெண்டர் அறிவிப்பு வெளியானது. அங்கு Elevated highway அமைக்கப்படுவதன் மூலம் விபத்துகள் பெருமளவில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications