ஸ்டாலின், கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலின், கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
ஸ்டாலின், கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசினார்.
சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான ஸ்டாலினை கட்டிப்பிடித்து அவர் ஆறுதல் கூறினார்.
பின்னர் ஆளுநரின் கையை பிடித்து அழைத்து சென்ற ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தார்.
மெரினாவில் இடம் கோரிய விவகாரம் தொடர்பாக இந்த பேச்சு இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications