முதல்வராகிறார் சசிகலா.. எப்போது பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் ஆளுநர்?
அதிமுக பொதுச் செயலாளர் சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், உருவான பரபரப்பை அடுத்து பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் டெல்லி விரைகிறார்.
சென்னை: உதகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த தமிழகத்தின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் டெல்லிக்கு அவசரமாக புறப்பட்டுள்ளார்.
அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் முதல்வராக வரும் 9ம் தேதி பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், உதகைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள கவர்னர் வித்யாசாகர ராவ் சென்னைக்கு அவசரமாக திரும்புவதாக இருந்தது. ஆனால், டெல்லிக்கு சென்று மத்திய அரசோடு ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ள கவர்னர் வித்யாசாகர் ராவ். கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
மத்திய அரசிடம் ஆலோசனை நடத்திய பின்னர் சென்னை திரும்பும் கவர்னரை , ஓபிஎஸ் நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி கொடுக்க உள்ளார். மேலும், சட்டசபைக் குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட தீர்மான நகலை ஓபிஎஸ் கவர்னரிடம் கொடுக்க உள்ளார். அதன் பிறகு சசிகலா முதல்வராக பொறுப்பேற்கும் நாள் தெளிவாக வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications