மாரடைப்பில் மரணிக்கும் போதும் பயணிகள் உயிர் காத்த அரசு பஸ் டிரைவர்
செங்குன்றம் அருகே மாநகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற சுந்தர்ராஜ் என்பவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: செங்குன்றம் அருகே மாநகரப் பேருந்தை ஓட்டிச் சென்ற சுந்தர்ராஜ் என்பவர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணம் நெருங்கிய தருணத்திலும் டிரைவர் சுந்தரராஜன் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் செய்த போது ஒரு டிரைவர் எழுதிய கடிதம் வைரலானது.
ஒருநாள் பணியில் இருக்கும் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. என்னை நம்பி இத்தனை மக்கள் அமர்ந்து இருக்கின்றனரே என்று மனதில் வைத்து கொண்டு, அந்த வலியை தாங்கிக் கொண்டு வண்டியை கட்டுபாட்டில் வைத்து ஓரம் கட்டினேன். உடலளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மனதளவில் மகிழ்ச்சியோடு தான் என் பணியை செய்தேன் என்று எழுதியிருந்தார். அது கதையல்ல நிஜம்தான் என்று கூறும் அளவிற்கு இன்றைக்கு பல டிரைவர் மாரடைப்பில் மரணமடைகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேத்துப்பட்டு அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவர் அன்புராஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தி விட்டு நெஞ்சுவலிப்பதாக கூறினர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாக மரணமடைந்தார். போளூரில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்த இயக்கிய அன்புராஜின் மரணம் பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
பஸ் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அவரை வேறு ஒரு பஸ் மூலம் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். அரசு பேருந்தை ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு இயக்கினார். ஆந்திர மாநிலம் தடாவிற்கு பேருந்து வந்தபோது ஓட்டுனர் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. வலியால் துடித்துக் கொண்டிருந்த சிவக்குமார், சாதுர்யமாக பேருந்தை ஓட்டி சாலையோரம் நிறுத்தி விட்டு உயிரை விட்டார். அவரது சாமர்த்தியமான முயற்சியினால் 80 பயணிகள் உயிர் தப்பினர்.
பணிச்சுமை காரணமாக அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் பல டிரைவர்கள் மாரடைப்பினால் மரணமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி












Click it and Unblock the Notifications