For Daily Alerts
Just In
வேலூர்: சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தம்; பயணிகள் தவிப்பு!
வேலூர்: வேலூர் அருகேயுள்ள சுங்கச்சாவடி ஒன்றில் அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
வேலூர் அருகேயுள்ள, வாணியம்பாடி அடுத்த நெக்குந்தியில் உள்ள சுங்கச் சாவடியில் அரசுப் பேருந்தகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்டதைவிட அதிக முறை அரசு பேருந்துகள் அந்த சாலையில் சென்றதாக சுங்கச்சாவடி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.
சுங்கச்சாவடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால், சேலம் கோட்ட அரசு பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.
இதேபோல் கடந்த மாதம் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் உள்ள சுங்கச் சாவடியில், அரசு பஸ்களுக்கான மாதாந்திர அனுமதி சீட்டை புதுப்பிக்கவில்லை எனக் கூறி அரசு பஸ்கள் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
TN Govt buses were stopped at Vellore toll gate for non payment.
Story first published: Wednesday, August 13, 2014, 18:57 [IST]