மேட்டுர் அரசு மருத்துவமனையில் கண்பார்வை இழந்தவர்களுக்கு ரூ.25,00,00 இழப்பீடு வழங்குக - நாகராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சையின் போது கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமாக ரூ.25,00,00 அரசு உடனே வழங்க வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜிகே நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்த பலருக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டது.

Govt., to give Rs.25,00,00 for those who were lost eye power - GK Nagaraj

இது தொடர்பாக கொங்கு நாடு ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் ஜிகே நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் 23 பேருக்கு செய்யப்பட்ட கண்புரை அறுவை சிகிச்சையால் 16 பேர் கண்பார்வை இழந்துள்ளனர். இதில் கூலிவேலை செய்வோர்கள் மற்றும் ஏழை,எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சையளிக்க உயர்மட்டக்குழு அரசு அமைத்தாலும், கண்பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமாக ரூ.25,00,00 அரசு உடனே வழங்க வேண்டும். மேலும் கண்பார்வை பாதிக்கப்பட்டவருக்கான காரணத்தை கண்டறிந்து, தவறு செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கான மருத்துவசெலவை அரசே ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+