ஆக. 15ம் தேதி கண்டிப்பாக மதுக் கடைகள், பார்களை மூட வேண்டும்.. அரசு உத்தரவு
சென்னை: ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் மதுக் கடைகள், பார்களை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரவல்லி இதுகுறித்து பிறப்பித்துள்ள உத்தரவில், வருகிற 15-8-2015 சனிக்கிழமை அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications