ஊராட்சி நிதி... கல்லா கட்டினால் கடும் நடவடிக்கை... அரசு எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர்களாக புதிதாக பொறுப்பேற்றவர்கள் காசோலை விவகாரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
காசோலையை தவறாக பயன்படுத்தினால் உரியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊராட்சி நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்க ஊராட்சிகளின் உதவி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியவர்கள்
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் cசெய்து கொண்டு அலுவல் பணிகளை தொடங்கிவிட்டனர். இத்தனை நாட்களாக தனி அலுவலர் வசம் இருந்த பொறுப்பு இப்போது முறையாக தலைவர், துணைத்தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.

பணப் பரிவர்த்தனை
ஊராட்சி நிதி விவகாரத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும், ஊராட்சி நிதியை தவறாக பயன்படுத்தினால் மாவட்ட நிர்வாகம் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் செலவு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல லட்ச ரூபாய் செலவழித்து வெற்றிபெற்ற நபர்கள், பதவியில் அமர்ந்தவுடன் அந்த பணத்தை ஈட்டிவிடலாம் என மனக்கணக்கு போட்டிருக்கக் கூடும். ஆனால் அதற்கு வழியில்லாத வகையில் மாவட்ட நிர்வாகங்கள் கிடுக்கிப்பிடி போடத் தொடங்கியுள்ளது.

எதிர்பார்ப்பு
ஊராட்சிகளில் காசோலை பண பரிவர்த்தனை செய்யும் அனைத்து அதிகாரமும் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கே உண்டு. இந்நிலையில், அந்த அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது என்பதே வாக்களித்து வெற்றிபெற வைத்தவர்கள் உள்ளிட்ட அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications