கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. உள்பட 8 நிறுவனங்கள் மீது புதிதாக 15 வழக்குகள்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலும் 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.141 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீஐஸ்வர்யா கிரானைட் நிறுவனத்தின் 2 பங்குதாரர்கள், 4 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் மதுரை நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி சரியான தகவல்களை வரும் 9ம் தேதிக்குள் அளிக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கீழவளவு, இ.மலம்பட்டி உள்பட 7 கிராமங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அடுக்கி வைத்துள்ள 10,509 கிரானைட் கற்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் பற்றி அவர் பி.ஆர்.பி. உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீது 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications