கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. உள்பட 8 நிறுவனங்கள் மீது புதிதாக 15 வழக்குகள்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலும் 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.141 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீஐஸ்வர்யா கிரானைட் நிறுவனத்தின் 2 பங்குதாரர்கள், 4 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் மதுரை நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி சரியான தகவல்களை வரும் 9ம் தேதிக்குள் அளிக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கீழவளவு, இ.மலம்பட்டி உள்பட 7 கிராமங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அடுக்கி வைத்துள்ள 10,509 கிரானைட் கற்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் பற்றி அவர் பி.ஆர்.பி. உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீது 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications