கிரானைட் முறைகேடு: பி.ஆர்.பி. உள்பட 8 நிறுவனங்கள் மீது புதிதாக 15 வழக்குகள்
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலும் 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் நடந்த முறைகேட்டால் அரசுக்கு ரூ.141 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீஐஸ்வர்யா கிரானைட் நிறுவனத்தின் 2 பங்குதாரர்கள், 4 ஊழியர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் மதுரை நீதிமன்றம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

கிரானைட் குவாரிகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி சரியான தகவல்களை வரும் 9ம் தேதிக்குள் அளிக்குமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
கீழவளவு, இ.மலம்பட்டி உள்பட 7 கிராமங்களில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அடுக்கி வைத்துள்ள 10,509 கிரானைட் கற்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் பற்றி அவர் பி.ஆர்.பி. உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீது 15 வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications