கிரானைட் முறைகேடு- மேலூர் நீதிமன்றத்தில் 3633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் பிஆர்பி, மதுரா நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட
மதுரை: கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி, மதுரா உள்ளிட்ட 3 நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அவற்றை அரசு நிலங்களில் அனுமதியின்றி அடுக்கி வைத்தாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்து அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி, மதுரை, ராஜசேகரன், ஆர்வி எண்டர்பிரைசஸ், ஓம் ஸ்ரீ கிரானைட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுதொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிஆர்பி, மதுரா, ராஜசேகரன் ஆகிய 3 நிறுவனங்கள் மீது கிரானைட் முறைகேடு தொடர்பாக 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications