சகாயம் குழுவிற்கு தகவல் கொடுத்தவர் மீது தாக்குதல்; கொலை மிரட்டல் – விசாரணையில் போலீசார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் குழுவிற்கு தகவல்கள் திரட்டிக் கொடுத்தவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கொலை மிரட்டலும் விட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள மலம்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன்.
இவர், கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் சகாயத்தின் விசாரணை குழுவுக்கு பல்வேறு தகவல்களை திரட்டி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஞானசேகரன் வீட்டில் இருந்த போது ஒரு மர்ம கும்பல் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. ஞானசேகரனையும் அடித்து உதைத்தனர். அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்கள்.
இது தொடர்பாக ஞானசேகரன் கீழவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications