நிலத்தடி நீர் குறைவால் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் போகலாம் – திடுக்கிடும் தகவல்
சென்னை : அதிகரித்து வரும் வெப்பநிலையால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.இந்த நிலைமை நீடித்தால் உணவுப்பஞ்சம் போல குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சென்னையில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தென்கிழக்கு கடலோர பகுதி அலுவலகம் மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

ஆய்வில் கிணறுகள்:
இந்நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து 1369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 778 கிணறுகளும் 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

நீர்மட்டக் குறைவு சதவீதம் அதிகம்:
தமிழகத்தில் 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில் 78 சதவீதம் அதாவது 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம் 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

சென்னையிலும் குறைவு:
தலைநகர் சென்னையில் உள்ள 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில் ஐந்து கிணறுகளில் 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில் 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழைப்பொழிவு குறைவு:
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து இதர மாவட்டங்களில் மழைபொழிவு குறைந்துள்ளது.மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில் 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் 10 மீட்டருக்குள் உள்ளது.

மழைநீர் திட்டம் தொய்வு:
கடந்த 2001 இல் மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் அதன்பின் அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

நிலத்தடி நீர்வளம் குறைவு:
இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில் நிலத்தடி நீர் வளத்தை காப்பது இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications