நிலத்தடி நீர் குறைவால் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் போகலாம் – திடுக்கிடும் தகவல்
சென்னை : அதிகரித்து வரும் வெப்பநிலையால் தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகி உள்ளது.இந்த நிலைமை நீடித்தால் உணவுப்பஞ்சம் போல குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சென்னையில் உள்ள மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் தென்கிழக்கு கடலோர பகுதி அலுவலகம் மழை பொழிவு, நிலத்தடி நீர் இருப்பு உள்ளிட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.

ஆய்வில் கிணறுகள்:
இந்நிறுவனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து 1369 கிணறுகளில் ஆய்வு மேற்கொண்டது. இதில் 778 கிணறுகளும் 591 ஆழ்துளை கிணறுகளும் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.

நீர்மட்டக் குறைவு சதவீதம் அதிகம்:
தமிழகத்தில் 712 கிணறுகளில் மேற்கொண்ட ஆய்வில் 78 சதவீதம் அதாவது 559 கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. அதே சமயம் 153 கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

சென்னையிலும் குறைவு:
தலைநகர் சென்னையில் உள்ள 13 கிணறுகளில், ஏழு கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், ஆறு கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்தும் உள்ளது. இவற்றில் ஐந்து கிணறுகளில் 2 மீட்டர் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு கிணற்றில் 4 மீட்டர் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழைப்பொழிவு குறைவு:
நடப்பாண்டு ஜனவரி நிலவரப்படி தர்மபுரி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருநெல்வேலி தவிர்த்து இதர மாவட்டங்களில் மழைபொழிவு குறைந்துள்ளது.மாநிலத்தின் கடலோரம் மற்றும் மத்திய பகுதியில் 76 சதவீத கிணறுகளின் நீர்மட்டம் 10 மீட்டருக்குள் உள்ளது.

மழைநீர் திட்டம் தொய்வு:
கடந்த 2001 இல் மழைநீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. ஆனால் அதன்பின் அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.

நிலத்தடி நீர்வளம் குறைவு:
இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் நிலத்தடி நீர் வளம் குறைந்துள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி வர்த்தக ரீதியில் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. இந்நிலையில் நிலத்தடி நீர் வளத்தை காப்பது இப்போதைய மாநில அரசின் கையில் தான் உள்ளது.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications