முறுக்கு கார சேவுக்கு பொருந்துமா?.. அருண் ஜேட்லியை விளாசும் அரவிந்த் சாமி!
ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக வெளியான அறிவிப்பைக் குறிப்பிட்டு நடிகர் அரவிந்த்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
சென்னை: ஜிஎஸ்டி வரி குறைப்பால் இப்போதே தீபாவளி வந்து விட்டது என்று மோடி கூறியுள்ள நிலையில் வரி குறைப்பு கிண்டலடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் அர்விந்த்சாமி.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். மத்திய அமைச்சர்களும் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி வரி குறைப்பு பற்றி நடிகர் அரவிந்த்சாமி பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
|
இதற்குத்தான் காத்திருந்தேன்
இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன். யாராவது முழு விவரங்களைப் படித்தீர்களா? என்று கேட்டுள்ளார்
|
முறுக்கு கார சேவுக்கு பொருந்துமா?
இது முறுக்கு மற்றும் காராசேவுக்கும் பொருந்துமா? என்பதை டிவிகளில் விவாதங்களைப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
சினிமா டிக்கெட்டுகளுக்கு வரி
மேலும், சினிமா டிக்கெட்டுகளுக்கு இரட்டை வரி. இடைவேளையில் வாங்கி சாப்பிடும் தின்பண்டங்களுக்கு வரி குறைப்பு. இதை 'அனுமானமான கூட்டு சேமிப்பு திட்டம்' என விளம்பரப்படுத்தலாம்.
|
12 சதவித ஜிஎஸ்டி வரி
5 சதவித ஜிஎஸ்டி என்பதால் அதிக தின்பண்டம் சாப்பிட்டுவிட்டேன். உடல்நலம் சரியில்லை. மருத்துவரிடம் சென்றால் அதிக கட்டணம். ஏன் என்று கேட்டால் ஸ்டெதஸ்கோப், ரத்த அழுத்த கருவிகளுக்கு 12 சதவித ஜிஎஸ்டி என்றார். அப்படியா? என்று கேட்டுள்ளார்.

அரவிந்த் சாமியின் ட்விட்டர்கள்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கிண்டலடிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி பற்றி நடிகர் அரவிந்த சாமி தனது டுவீட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.












Click it and Unblock the Notifications