கமல் ஒரு கோழை, அவர் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா?.... எச்.ராஜா காட்டம்!
நடிகர் கமல்ஹாசன் ஒரு கோழை அவர் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் கமல்ஹாசன் ஒரு கோழை அவர் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன் தினம் இந்துதீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது என்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் சிறுவன் ஒருவன் கமல்ஹாசனின் படத்தை பின்னால் இருந்து ஒருவர் சொல்ல அதனை கேட்டு கமலின் படத்தை கத்தியால் குத்தி கிழிப்பது போல அந்த வீடியோ பதிவு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கமல் பதிவிட்டிருந்த கருத்தில் என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என்று கூறி இருந்தார்.
கமல் சொன்ன இந்து தீவிரவாதம்
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது முதல் அவர் கூறும் ஒவ்வொரு கருத்தும் சர்ச்சையை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில் எந்த மதமாக இருந்தாலும் அதில் வன்முறை இருக்கக் கூடாது என்று சொன்னவர், இந்து மதத்திலும் தீவிரவாதம் இருப்பதாக கூறி இருந்தார். இதனையடுத்து அவரை இந்து அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ராஜா விமர்சனம்
இந்நிலையில் கமல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, மணிரத்னம் வீட்டில் வைத்த குண்டு வெடிக்கவில்லை, ஆனால் விஸ்வரூபம் விவகாரத்தில் பிரச்னை என்றதும் கும்பிட்டு விழுந்து 16 கட்ஸ் ஒப்பு கொண்ட தைரியமில்லாத நபர் கமல்ஹாசன். அவர் போய் இந்து அமைப்பை பற்றி பேசுவாரா என்று ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடுங்கியவர் கமல்
அண்மையில் P. ஜெயினுலாபுதீனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்னும் 20 வருடத்திற்கு விஸ்வரூபம் 2 வராது என்றும் உலகநாயகன் விஸ்வரூபம் ரிலீஸின் போது நடுங்கிப் போயிருந்தார் என்று ஜெயினுலாபுதீன் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
|
கோழை சொல்வதற்கு கவலை வேண்டாம்
கமல்ஹாசனை கேலி செய்வது போல கைகளை நடுங்குவதைப் போல காண்பித்து ராஜா கேலி செய்துள்ளார். அப்படிப்பட்ட கோழை கமல்ஹாசன், அந்த கோழை சொல்வதைப் பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை என்று நக்கலாக சிரித்துக் கொண்டே ராஜா பேட்டியளித்துள்ளார்.