குஜராத் சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பா?... இல்லை திணிப்பா? .. ராஜாவுக்கு கோபம் வந்துருச்சு
குஜராத் தேர்தலில் ஊடகங்கள் கருத்துகணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை நடத்தி வருகின்றன என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை: குஜராத் தேர்தலில் ஊடகங்கள் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடத்துவது அது போல் தெரியவில்லை, அவை கருத்து திணிப்புகளாகவே தெரிகிறது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்துக்கு வரும் 9, 14 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எப்படியாயினும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று பாஜகவும், காங்கிரஸும் போட்டி போட்டுக் கொண்டு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
எப்போதும் போல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை ஆங்கில, இந்தி ஊடகங்கள் நடத்தி வருகின்றன. இந்த முடிவுகள் பாஜகவுக்கு எதிரானதாகவே இருக்கின்றன.
இந்நிலையில் கருத்து கணிப்புகள் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், குஜராத் தேர்தல்கள் கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் பல கருத்து திணிப்பு முயற்சிகள் ஊடகங்களில் பரப்பப்படுகிற்றன. அவர்கள் நம்புவது ஹர்திக் படேலை. மிகப் பிரபலமான நிர்வாகத்திறமை மிக்க திரு கேசவ்பாய் படேல் தனிகட்சி அமைத்து போட்டியிட்டுத் சென்ற தேர்தலில் பா.ஜ.க வென்றது. இது வெறும் பச்சா என்று குறிப்பிட்டுள்ளார்.